Friday, 11 January 2013

திருக்குறளும் ரஜினி பஞ்ச் டயலாக்கும்

.

    ரஜினிகாந்த் ஸடைலில் படிக்கவும்.

              வலியார் முன்தன்னை நினைக்க தான்தன்னின்
                   மெலியார் மேல் செல்லுமிடத்து.

    சின்னவங்கிட்ட மோதினா நீ கிங்கு பெரியவங்கிட்ட மோதினா உனக்கு சங்கு.

             பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
              வெருஉம் புலிதாக் குறின்.

    யானைஉருவத்துலபெருசு. புலி ஊக்கத்துலபெருசு. உருவத்துலபெருசா        இருக்குனுமாஊக்கத்துலபெருசா இருக்குனுமாநீயேமுடிவுபண்ணிக்க.

             அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
              பகவன் முதற்றே உலகு.

    , ஆ இல்லன்னாமொழியில்ல.அப்பாம்மா இல்லன்னயாரும் இல்ல.

             சென்ற இடத்தால் செலவிடாதீதொரிஈ
              நன்றின்பால் உய்ப்பதுஅறிவு.

    மனசுஎன்னநினைக்குதோஅதைசெய்யக்கூடாது. எது நல்லதோ  அத செய்யனும்.
            
             எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
             கண்னென்பவாழும் உயிர்க்கு.

    எண்னும் எழுத்தும் கண்ணு, இத தெரிஞ்சிகிட்டாவாழ்க்கையில் வின்னு.
   
             தீயினால் சுட்டபுண்; உள்ளாறும் ஆறாதே
             நாவினால் சுட்டவடு.
    நெருப்புசுட்டகாயத்தவிடநெஞ்சசுட்டகாயம் பெரிசு.

             அருளிலாதவற்குஅவ்வுலகம் இல்லைääபொருளிலார்க்கு
             இவ்வுலகம் இல்லாகியாங்கு.
    அன்பு இல்லன்னாஆண்டவன் கிட்ட இடம் இல்ல. பணம் இல்லன்னாஆண்டுகிட்டிருக்கிறவங்கிட்ட இடம் இல்ல.

             எண்ணித்துணிககருமம் துணிந்தபின்
             எண்ணுவம் என்பது இழுக்கு.
    ஒருவேலையயோசிச்சுஆரம்பி. ஆரம்பிச்சுட்டுயோசிக்காதே.

             அஞ்சுவதுஅஞ்சாமைபேதமைஅஞ்சுவது
             அஞ்சல் அறிவார்த் தொழில்.
    பயப்படறத்துக்குபயப்படாம இருக்கக் கூடாது. பயப்பாடம இருக்கறத்துக்குபயப்படக்கூடாது.

             எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
             மெய்ப்பொருள் காண்பதறிவு.
    யார் சொல்றாங்கஎன்பதுமுக்கியமில்ல. என்னசொல்லறாங்கங்கறதுதான் முக்கியம்.
                                                                                -சீனி

No comments:

Post a Comment