ஒரு கிராமத்தில் சாலை அமைக்கும் பனி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சாலையை அகலப்படுத்துவதற்க்காக சாலையோரத்தில் இருந்த ஒரு சிறு கோவிலை இடமாற்றம்
செய்ய பெரும்பகுதியிணர் தீர்மாணித்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் எதிர்க்கவே
பிரச்சனை பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்தில் பெரியவர் ஒருவர் கேட்டார்...
மனிதன் காட்டை அழித்து நாட்டை உருவாக்கினான். அந்த காட்டில் இருந்த மிருகங்கள்
எல்லாம் எங்கே சென்றது?. எவராலும்
பதில் சொல்ல இயலவில்லை. அவரே சொன்னார் அந்த மிருகங்கள் தான் இங்கே மனிதர்களாக
அலைந்து கொண்டிருக்கின்றன என்றார். உண்மையை உணர்ந்த இரு பிரிவினரும் சமாதானமாகி
சாலையை அமைப்பதென முடிவெடுத்தனர்.
அந்த கிராமம் –
உங்கரானஹள்ளி
சொன்னவர் –
ஜெகதீசன்
கோவில்
– தண்டு மாரியம்மன் கோவில்
No comments:
Post a Comment